Saturday 9 February 2013

பதிவிடாத பின்னூட்டம்

ALILAIKRISHNAR

 

ணக்கம் நண்பர்களே,

காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் பற்றிய கருத்துக்களும், பின்னூட்டங்களும் இப்பொழுது எடிட்டரின் ப்ளாகில் சூடு பறத்திக் கொண்டு இருக்கின்றது.

காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் வெளியிடுவதைப் பற்றிய எடிட்டரின் அறிவிப்புகளை, லயன் முத்து வலைத்தளத்திலும், காமிக்ஸ் புத்தகத்தில் வரும் எடிட்டரின் ஹாட்லைனையும் ஆர்வத்தோடு தொடர்ந்து வந்தேன். மறுபதிப்பு சம்பந்தமான எனது பின்னுட்டங்களையும் லயன் முத்து தளத்தில் இட்டு வந்தேன். எனது இந்த தொடர்தல் எதுவரை என்றால், எடிட்டரின் என் வழி தனி வழி பதிவுவரை.

ன் வழி தனி வழி” பதிவைப் பார்த்த பிறகு, எனக்கு மன வருத்தம் ஏற்பட்டது. IDLE MIND IS DEVIL’S WORKSHOP என்று ஒரு ஆங்கில சொலவாடை உண்டு. என் வழி தனி வழி பதிவை படித்த பொழுது எனது மனதில் தோன்றிய எண்ணம், லயன் முத்து ப்ளாகிற்கு வரும் வாசகர்களின் எண்ணவோட்டத்தை எப்பொழுதும் பிஸியாக வைத்துக் கொள்ள, எடிட்டர் ஏதாவது ஒரு அறிவிப்பையும், கருத்துக் கணிப்பையும், பெயர் சூட்டுதலையும் கேட்கின்றார், பின் அவர் என்ன நினைக்கின்றாரோ அதையே செய்து கொண்டு போகின்றார் என்ற எண்ணம் தோன்றியது.

Date Proof

தையடுத்து ஜூலை மாதம் 23ம் தேதி 2012-ம் வருடம் இரவு ஒரு மணிவரை விழித்திருந்து, என் வழி தனி வழி பதிவிற்கு ஒரு பின்னூட்டத்தை எடிட்டரின் தளத்தில் அடித்தேன். என்ன காரணமோ தெரியவில்லை, அந்த பின்னூட்டம் என்ன செய்தாலும், லயன் முத்து தளத்தில் பதிவிட முடியவில்லை.

ந்த பின்னூட்டம் மிக நீண்டதாகவும், சில இடங்களில் மிகவும் காட்டமாகவும் இருந்ததினால்,  எடிட்டரின் மனம் புண்படக்கூடாது என்றும், கடிதமாக எதை வேண்டுமானாலும் எழுதி போஸ்ட் செய்தால் அது இருவருக்கு இடையே மட்டும் நிகழும் ஒரு கருத்து பறிமாற்றமாக மட்டுமே இருக்கும். அதையே  பொதுவான தளத்தில், அதுவும் மற்றவர்கள்  முன்னிலையில், ஏதோ ஒரு புள்ளி விவர புலியை போல பின்னூட்டமிடுவது சரியில்லை என்று மனதில் பட்டதால், அதை வேர்டில் காப்பி பேஸ்ட் செய்து, நிறைய எடிட் செய்து பின் மீண்டும் எடிட்டரின் தளத்தில் பின்னூட்டமாக போட்ட பின் ப்ளாக்கர் சுட்டிய மெசேஜ் – ”பின்னூட்டம் 5000 வார்த்தைகளுக்கு மேல் இருக்கின்றது, சுருக்கவும்!” – என்றது.

மீண்டும் காப்பி, பேஸ்ட், எடிட் செய்து பின்னூட்டமிட்டால், ப்ரவுசர் க்ராஷ் ஆனது, அடுத்து சிஸ்டம் கிராஷ் ஆனது. அப்படியும் விடாமல் கண்ட்ரோல், ஆல்ட், டெல் கொடுத்து ரீஸ்டார்ட் கொடுத்தால், பல அப்டேட்கள் இருக்கின்றது, அவைகள் அப்டேட் ஆகி முடிக்கும் முன்னே சுவிட்ச்-ஆப் செய்ய வேண்டாம் என முகத்தில் அறைவதுபோல விண்டோஸ் செய்தி சொன்னது. என்ன இது, இந்த பின்னூட்டமிடுவதற்குள் இத்தனை சிக்கல் வருகின்றதே, குடுகுடுப்பைக்காரன்  மந்திரம் போட்டு நாயின் வாயைக் கட்டுவது போல் எடிட்டரும் ஏதோ மந்திரம் போட்டு நமது கம்ப்யூட்டருக்கு கட்டு போட்டுவிட்டார் போல, பேசாமல் இந்த பின்னூட்டத்தை தவிர்த்து விடலாம் என்று அதை வேர்டில் சேமித்து வைத்து விட்டு விட்டேன்.

து ஏனோ தெரியவில்லை, இப்பொழுது வரை அந்த் வேர்ட் பைலை திறந்தாலும் வேர்ட் புரோகிராமே ப்ரீஸ் ஆகி நாட் ரெஸ்பாண்டிங் என்று பிழை சுட்டுகிறது. இப்போழுதும் பாடாய் பட்டுத்தான் இங்கு காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றேன்.  எல்லாம் ஒரே மர்மமாக இருக்கின்றது.

ன்று CC பற்றிய எடிட்டரின் ”ஆதலினால் அசடு வழிவீர்” பதிவை பார்க்கும் முன்னரே இந்த பதிவை துவக்கிவிட்டேன். சரியாக சொல்வதென்றால் எடிட்டரின் இதற்கு முந்தய ”ஒரு கட்டை விரல் காதல்” பதிவை கண்டதும் இந்த பதிவை உருவாக்க ஆரம்பித்தேன். ஏனெனில் அந்த பதிவின் பின்னூட்டங்களில் CC-க்கான சந்தாவைப் பற்றியும் இன்னும் சில விஷயங்களைக் சொல்லியிருந்தார். அதை அப்படியே இங்கு கீழே கொடுக்கின்றேன்.

“சந்தோஷங்களுக்கிடையே - சின்னதாய் ஒரு வருத்தமும் கூட ! மாயாவி ; லாரன்ஸ் - டேவிட் ; ஜானி நீரோ etc., மறுபதிப்புகள் வேண்டுமென்ற கோரிக்கை பலமாக ஒலித்த போதிலும், சந்தாக்களின் எண்ணிக்கையில் எஞ்சி நிற்பது பலவீனமே ! இது வரை காமிக்ஸ் க்ளாசிக்ஸ் சந்தாக்களின் எண்ணிக்கை 160 -ஐத் தாண்டிய பாடைக் காணோம் எனும் போது மண்டையைச் சொறியத் தான் தோன்றுகிறது.  சந்தா செலுத்தி ஒரு மொத்தமாய் எல்லா மறுபதிப்புகளையும் வாங்குவதை விட, தேவையானவற்றை மட்டும் அவ்வப்போது வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமா ? - அல்லது புது யுகக் கதைகளின் ஈர்ப்பினால் பழசுக்கு மவுசு குறைந்து போய் விட்டதா ? - புரியாத புதிரே ! லயன்-முத்து காமிக்ஸ் புது இதழ்களுக்கான சந்தா புதுப்பித்தல் ஜரூராய் நடந்து வருகின்றது சற்றே ஆறுதல் தந்திடும் சங்கதி ! ஒன்று மட்டும் நிச்சயம் - வண்ணத்தின் வீரியம் டெக்ஸ் வில்லர் போன்ற விதிவிலக்கான அசாத்திய நாயகர்களைத் தவிர, பாக்கி அனைவரையும் சாய்த்து விடும் ஆற்றல் கொண்டதென்பது அப்பட்டம்! ”

மேற்கண்ட இந்த வரிகளே இந்த பதிவை தயாரிக்க என்னை துண்டியது.

ரி விஷயத்திற்கு வருகிறேன். இப்பொழுது இவ்வளவு சொல்லிவிட்டு, எடிட்டரின் என் வழி தனி வழி பதிவிற்கான என்னுடைய பின்னூட்டத்தினைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம்.

னி என்னுடைய ஆறிய பழைய கஞ்சியை இங்கு உங்கள் முன் வைக்கின்றேன். ஆறிய கஞ்சியாக இருந்தாலும், லேட்டாக வந்தாலும், இந்த விஷயம் இன்றும் எடிட்டர் ப்ளாகில் வெகு பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

னி பதிவிடாத என்னுடைய பின்னூட்டத்தின் சாரம்:

”டியர் எடிட்டர் திரு. விஜயன் அவர்களுக்கு வணக்கம்,

தற்கு முந்தய உங்களின் பதிவுகளிலிருந்து, இந்த பதிவு மிகவும் முரன்பட்டு, வித்தியாசமாக உள்ளது. அதாவது வாசகர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து அதற்கு ஏற்றது போல இந்த பதிவில் அதிரடியாக புதிய CC க்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளீர்கள்.

ங்களிடம் எனது கோரிக்கை என்னவென்றால், மறுபதிப்பு என்று வரும்போது, ஏற்கெனவே வந்த கதைகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துப் போடாமல் முதலில் இருந்து வரிசையாக போடுங்கள். உங்களது குழந்தைகளில் எதற்கு ஒரு சிலவற்றின் மேல் மட்டும் ஃபேவரிடிசம் காட்டுகிறீர்கள். எதையும் விட்டு விடாதீர்கள். மறுபதிப்புகளை அனைவரும் வாங்கத்தான் போகிறார்கள். உங்கள் திட்டமும் வருடத்திற்கு 6 புத்தகங்கள்தான்.

முத்து காமிக்ஸின் ஆரம்ப கால வாசகனாக இருந்தாலும், நான் சந்தாதாரர் ஆகிவிட்டாலும் CC யின் 6 புத்தகங்களையும் வாங்கத்தான் போகிறேன்.

புதிய சைஸ் என்று நீங்கள் சொன்னது, கம் பேக் ஸ்பெஷல் சைஸைத்தான் என்று நினைக்கின்றேன்.

றுபதிப்புகள் உண்மையிலேயே அர்த்தம் உள்ள விஷயமாக இருக்க வேண்டும் என்றால், கட்டாயம் அவை என் பெயர் லார்கோ சைஸிலும், வண்ணத்திலும்,தரமான ஆர்ட் பேப்பரிலும்தான் இருக்கவேண்டும். இவைகளில் ஒன்று குறைந்தாலும் காமிக்ஸ் தான் இருக்கும், அந்த காமிக்ஸ் புத்தகங்கள், கிளாசிக்(காக) இருக்காது. காமிக்ஸ் கிளாஸிக்கின் ஒவ்வொரு புத்தகத்தையும் ஒரு கலெக்டார்ஸ் எடிஷனாக இருக்கும்படி வடிவமையுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால் இப்போது உங்களுக்கு என்று இருக்கும் மார்க்கெட்டில், இப்போது நீங்கள் பின்பற்றும் தரத்தையும், தொழில் நுட்பத்தையும் ஒரே சமமாக உங்களது அனைத்து வெளியீடுகளிலும் கடைபிடியுங்கள்.

ங்களுடைய மெய்யாலும் முதல்முறையாக என்ற பதிவில் நெவர் பிபோர் ஸ்பெஷல், ரூ.400/- என்ற அறிவிப்பினால், வாசகர்களிடையே எழுந்த விலை குறித்தான பல விவாதங்களும், கோரிக்கைகளும் எழுந்த போது, அதற்கடுத்த உங்களது பதிவான “பதிவாய் ஒரு பதில்” பதிவில், விலை குறித்த விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக நீங்கள் அளித்திட்ட உங்களது தீர்ப்பை / தீர்மாணத்தை நான் இங்கே மீண்டும் பிரதிபலிக்கிறேன்.

”//ப்புறம் இந்த 'குறைந்த விலைக்கு கருப்பு வெள்ளையில் சாதா edition, கூடுதல் விலைக்கு வண்ணத்தில் தரமான பதிப்பு' என்பது பற்றி எல்லாம் சிந்திக்கவே நான் தயாரில்லை. 'இந்த மைசூர்பாகு விலை குறைந்தது - இதில் சக்கரையும் கிடையாது, நெய்யும் கிடையாது - கிலோ நூறு ரூபாய் தான் ' ; 'இது கிலோ நானூறு - சூப்பர் taste' என்று போர்டு போடுவதற்குச் சமானம் அது ! நாமே நம்மிடையே ஏற்ற தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிடுவதற்குச் சமானமான அது போன்ற முயற்சிகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் encourage செய்திடப் போவதில்லை !//”

என்று முந்தய பதிவில் சொல்லிவிட்டு, இப்போது நீங்களே இன்றய பதிவில் சொல்லியுள்ள விஷயங்கள், சிறிது முரன்படுகிறது. மறுபதிப்புத்தான், பழைய கதைகள் என்று சமாதானம் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இல்லை, நான் இரண்டு தரத்தில் மைசூர்பாகு விற்கத்தான் போகிறேன் என்று நீங்கள் சொன்னால் நான் சொல்வதற்கு ஏதும் இல்லை. ஏனெனில் உங்களுக்கு என்று ஒரு working space இருக்கும். அதில் வாசகர் தலையீடு என்பது அதிகமாக இருந்தால் நல்ல result கிடைக்காமல் போகும்.

ற்றொரு விஷயம், எந்த கதைகளெல்லாம் வெளியிடப்பட்ட உடனே சுடச்சுட விறுவிறுப்பாக விற்று தீர்ந்ததோ அந்த கதைகளை மட்டுமே மறுபதிப்புகளுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது எனது அனுமானம்.

லைவாங்கிக் குரங்கு மறுபதிப்புப் புத்தகத்தில், வாசகர்களுக்கு நீங்கள் எழுதிய உங்களது ”இது சீஸன் 2” கடிதத்தில் மறுபதிப்பைப் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை எழுதுமாறு கேட்டுக் கொண்டு, அந்த கடித்தின் கடைசியில் நீங்கள் எழுதியது,

//ந்த மறு பதிப்புப் பட்டியலுக்கு நமது லயன், திகில், மினிலயன், ஜூனியர் லயன் இதழ்கள் மட்டுமே consider செய்திட வேண்டுமென்பது தான் முக்கியம்! முத்து காமிக்ஸ் கதைகள் பிரதானமாக காமிக்ஸ் க்ளாசிக்ஸில் இத்தனை காலம் மறுபதிப்புகளாக வந்திட்டமையால் அவற்றிற்கு ஒரு தற்காலிக ஓய்வு!

So - ”நயாகராவில் மாயாவி”; மஞ்சள் பூ மர்மம்” என்று முத்துவின் கதைகளை எழுதிட வேண்டாமே ப்ளீஸ்?!//

- இது நீங்கள் எழுதியதுதான். ஆனால் இப்போது நயாகராவில் மாயாவி முன்னனிக்கு வந்து விட்டார். இது எப்படி சாத்தியமாயிற்று. எப்படி இதை கவனிக்காமல் விட்டீர்கள். அல்லது தெரிந்தேதானா. இது தான் உங்களது ”தனி வழியா”. பிறகு தலைவாங்கியின் கடைசி பக்கத்தில் எனது டாப் 20 கதைகள் என்ற ஒரு லிஸ்டையும் கொடுத்துவிட்டு, இந்த வலைத்தளத்திலும் ஒரு கருத்துக் கணிப்பை நடத்திவிட்டு, இப்போது வாசகர் கருத்தையும், உமது முந்தய கருத்துக்களையும் புறந்தள்ளி விட்டு, இந்த பதிவில் ”என் வழி தனி வழி” என்று போகிறீர்கள். இதற்கு அர்த்தம் எல்லோரிடமும் கேட்பேன் ஆனால் என் இஷ்டப்படிதான் செய்வேன் என்று அர்த்தமா!

ப்படி நீங்கள் உங்கள் வழி தனி வழி என்று சொல்வதற்கு, தலைவாங்கியில் இரண்டு பக்கங்களும், வாசகர் கருத்துக் கணிப்பும் தேவையில்லையே. நீங்கள் நினைத்ததை எப்போதும் போல செய்திருக்கலாமே. கள்ள ஓட்டு என்பது ஒரு பிரச்சனையே இல்லை. எந்த காமிக்ஸ் ரசிகனும் டெக்ஸையோ, கேப்ட்ன் டைகரையோ, கேப்டன் பிரின்ஸையோ வேண்டாம் என்று சொல்லப் போவதில்லையே. திகில் #2க்கு விழுந்த 5 சதவீத ஓட்டுக்களில் தான் கள்ள ஓட்டுக்கள் இல்லை அதனால் அதுதான் தேர்வு என்று சொல்லிவிடாதீர்கள்.

ந்த கருத்துக்கள் உமது உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருந்தால் -------என்ன சொல்வது. நமக்குள் மன்னிப்பு கேட்கக் கூடாது என்று முன்பே சொல்லியிருக்கிறீர்கள் அதனால் NO HARD FEELINGS என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் ஒரு கருத்தை சொல்லி அது சரியில்லை என்று நாங்கள் வாதிட்டால், அது வாக்கு வாதம், அல்லது, கருத்துக்கள் முரன்படுவது. இங்கு உங்கள் கருத்துக்கு நான் முரன்படவில்லை. உங்களது கருத்துக்கு நீங்களே மாறுபடக்கூடாது என்றும் நான் சொல்லவில்லை. இன்றய உங்களது பதிவிடப்பட்ட கருத்துக்களுக்கு உமது முந்தய கருத்துக்களையே நான் இங்கு பின்னூட்டமாக வைக்கின்றேன்.

baby krishna on palm leaf

ந்த பின்னூட்டத்தை இடும்போது, உங்களது தாயார் நீங்கள் சிறுவனாக பள்ளிக்குச் கிளம்பும் போது உங்கள் முகத்துக்கு கோகுல் சாண்டால் பவுடர் போடும் சீனும், ஆலிலை கிருஷ்ணன் சீனும், நீங்கள் குட்டி கிருஷ்ணன் ஜாடையில் இருக்கும் சீனும், என் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது.

டைசீயாக, கொலைகாரக் கலைஞனைப் போலவோ அல்லது தலைவாங்கியைப் போலவோ அல்லது இப்பொழுது பழைய கருப்பு வெள்ளை திகில் கதைகளின் ஸ்கேன் செய்த பக்கங்களைப் போலவோ தயவு செய்து மறுபதிப்புகள் வேண்டாம். தலைவாங்கியில் பேப்பர் நன்றாக இருந்தும் அச்சுத்தரம் நன்றாக இல்லை. ஸ்கேன் செய்ததினால் வந்த வினையாக இருக்கும் என்று நினைக்கின்றேன். மறுபதிப்புக்கள் revamped ஆக இருக்க வேண்டும், அதையும் from the scratch-லிருந்து செய்ய வேண்டும்.”

மேலே உள்ளவைகளே அந்த பழைய பின்னூட்டம்.

ப்பொழுது எடிட்டர் காமிக்ஸ் கிளாஸிக்ஸின் வெளியீடுகளின் லிஸ்டை மாற்றி இருக்கின்றார். இது மிகவும் வரவேற்கத் தகுந்த ஒரு விஷயம். இந்த புதிய லிஸ்டில் இருக்கும் நாம் விரும்பாத கதைகளும் மாறுதலுக்குள்ளாகும் என்று நம்புவோம்.

ந்த பதிவை இப்போழுது போடுவதற்கு காரணம், எடிட்டரை குறை சொல்வதற்கோ அல்லது குற்றம் சுமத்துவதற்கோ அல்ல. பழைய கதைகளை மறுபதிப்பிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எடிட்டரின் ப்ளாகில் உரத்த குரலில், திரும்பத் திரும்ப எழுப்பப் படுகிறது. சில பேர்களே இந்த கோரிக்கையை முன் வைத்தாலும், இது போன்ற கோரிக்கைகள் தொடர்ந்து பல நாட்களாக, பல பதிவுகளில் எழுப்பப்படும் பொழுது, அனைவருமே மறுபதிப்பை விரும்புகின்றனர் என்ற உணர்வை எடிட்டருக்கு ஏற்படுத்துகின்றது.

டிட்டருக்கும், புதிய கதையை எடுத்து பல விதங்களில் அல்லல் படுவதற்கு பதில், பழைய கதையை மறுபதிப்பிடுவது ஒரளவிற்கு சிக்கல் குறைந்த விஷயம். அதனாலேயே அவர் திரும்ப திரும்ப மறுபதிப்பு விஷயத்திற்கே வந்து நிற்கிறார்.

டைட்டானிக் படத்தை 3D-ஆக மாற்றம் செய்து மறு வெளியீடு செய்யப்பட்டது. படம் தியேட்டருக்கு வந்து சென்ற சுவடே காணவில்லை.

ர்ணன் படம் DTS ஒலியிலும், வண்ணத்திலும் மேம்படுத்தப்பட்டு தியேட்டர்களில் மறு வெளியீடு செய்யப்பட்டு வசூலில் சக்கை போடு போட்டது.

து போலவே அர்னால்டு ஷ்வாஷ்னெகர் நடித்த டொட்டல் ரீகால் கதையையும், சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஜட்ஜ் ட்ரெட், ஆம் நமது முத்து லயனில் தோன்றியவரேதான், ரீபூட் என்ற பெயரில் கதையில் மாற்றங்கள் செய்து, புது ஹீரோக்களை வைத்து பல கோடி செலவில் அட்டகாசமான அனிமேஷன் காட்சிகளுடன் சமீபத்தில் வெளிவந்தது. இரண்டு படங்களும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தோல்வியே கண்டது. புது ஸ்பைடர்மேனுக்கும் இதே நிலைதான். ஆனால் மாற்றுக் கோணத்தில் படமாக்கப்பட்ட பேட்மேன் டார்க் க்னைட் ட்ரைலாஜி வசூலில் அதகளம் செய்தது.

றுபதிப்பென்றால், அதன் அவசியமும், அது எந்த வகையினில் பழையதிலிருந்து மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதே முக்கியம்.

றுபதிப்பு வேண்டாம் என்னும் கருத்துக்களும் எடிட்டரின் ப்ளாகை எட்ட வேண்டும். இல்லையென்றால் முதலுக்கே மோசம் என்ற நிலை சற்று ஸ்டெடியான நிலையை எட்டி இருக்கும் தற்போதய லயன் முத்து வெளியீடுகளுக்கு ஏற்படலாம். பாதிக்கப்படப் போவது லயன் முத்து சந்தாதாரர்களே. நான் பாதிப்பு என்று சொல்வது பணத்தை அல்ல, காமிக்ஸ் இல்லாத வறட்சி நிலையினையே.

அன்புடன்,

Tiedup Krishna

பாலாஜி சுந்தர்,

www.picturesanimated.blogspot.com